தமிழக நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2000 நிவாரணம் – அரசாணை வெளியீடு!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு வழி செய்யும் வகையில் தமிழக அரசு சார்பில் ரூ.2,000 நிவாரண நிதி வழங்கப்பட உள்ளதாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது
நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிதியுதவி:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மாநில அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக கூட்டம் அதிகம் கூடாமல் இருக்க திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பல நாட்டுப்புற கலைஞர்கள், ராட்டினம் ஓட்டிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
TN Job “FB Group” Join Now
கடந்த ஆண்டும் திருவிழாக்கள் நடத்தப்படாததால் நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் திருவிழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்படாததால் தற்போது நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2000 நிவாரண நிதி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நலவாரியத்தில் பதிவு செய்த 6,810 கலைஞர்களுக்கு தலா ரூ.2000 நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கா? முதல்வர் இன்று ஆலோசனை!
கடந்த ஆண்டு கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டனர். அப்போது அரசு தரப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.