தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கா? முதல்வர் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகமாக பரவி வருகிறது. இதனால் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில் இன்று ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முதல்வர் ஆலோசனை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க தலைமை செயலாளர் பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தார். இருந்த போதிலும் தொற்று பரவல் குறையாமல் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 6600க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கட்டுப்பாடுகளை தீவிரபடுத்த அரசு சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
தமிழக சுகாதாரத்துறை சார்பில் முழு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் மோடி காணொளி மூலமாக மக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதில் மாநில அரசுகள் தெரிவிக்கும் கட்டுப்பாடுகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும், கொரோனா பரவல் குறையாமல் பரவினால் மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தலாம் என தெரிவித்தார்.
TNPSC தேர்வுகளில் புதிய மாற்றங்கள் அறிவிப்பு – ஜூன் முதல் அமல்!!
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுகாதாரத்துறை மற்றும் மூத்த அதிகாரிகளுடன் இன்று (ஏப்ரல் 12) ஆலோசனை நடத்த உள்ளார். இதற்கான அனுமதியை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. மேலும் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்குவது குறித்தும் முழு ஊரடங்கு அமல்படுத்தலாமா அல்லது இரவு ஊரடங்கு அமல்படுத்தலாமா என்பது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.