தமிழக மின்சார வாரிய கேங்மேன் பணியிடங்கள் – 8500 பேர் நியமனம்!!
தமிழக மின்சார வாரியம் சார்பில் வெளியிடப்பட்ட 10,000 ‘கேங்மேன்’ பணியிடங்களுக்கு உடற்தகுதி தேர்வு மற்றும் எழுத்துத்தேர்வு வாயிலாக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேங்மேன் பணியிடங்கள்:
தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் வாயிலாக நிரப்பப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கேங்மேன் பணியிடங்களுக்கு நேரடித் தேர்வு நடத்தப்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்திருந்தது. இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிக்கையை எதிர்த்து மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 10,000 பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் 9,613 பேருக்கு பணி நியமன ஒதுக்கீட்டு ஆணை பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி இரவு மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டது. அவ்வாறு பணி நியமன ஆணை அனுப்பப்பட்ட நபர்கள் அவர்களது மாவட்டத்தில் உள்ள மாவட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களுக்கு மார்ச் மாதம் 10 ஆம் தேதி மாலை 5.15 மணிக்கு முன் பணியில் சேர வேண்டும்.
தமிழக அரசு ஊழியர்களின் வாக்களிக்கும் உரிமை – உயர் நீதிமன்றம் உத்தரவு!!
இதுவரை இந்த பணியில் 8,500 பேர் சேர்ந்துள்ளனர். மீதமுள்ள நபர்கள் நாளைக்குள் வேலையில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பணியில் சேருவதற்கான அவகாசம் நாளையுடன் முடிவடையும் நிலையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டவர்கள் விரைவில் பணியில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.