தமிழகத்தில் ஓட்டு எண்ணிக்கை நாள் – 1 லட்சம் போலீசாருடன் பாதுகாப்பு பணிகள் தீவிரம்!!

0
தமிழகத்தில் ஓட்டு எண்ணிக்கை நாள் – 1 லட்சம் போலீசாருடன் பாதுகாப்பு பணிகள் தீவிரம்!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணும் பணிகள் வரும் ஞாயிறு கிழமை நடக்க இருப்பதால் பாதுகாப்பு பணிகளில் ஒரு லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

ஓட்டு எண்ணிக்கை:

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் 75 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டது. அங்கு தொகுதிவாரியாக தனித்தனி அறைகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் துப்பாக்கியுடன் கூடிய துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தமிழகத்தில் வரும் நாட்களில் கொரோனா வேகமெடுக்கும் – மாநகராட்சி ஆணையர் தகவல்!!

தமிழக சிறப்பு காவல் படையினரும், மேலும் ஆயுதப்படை போலீசாரும், அடுத்தபடியாக உள்ளூர் காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து 24 நாட்களாக 4 அடுக்கு பாதுகாப்பு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கை நடக்கும் வரும் மே 2ம் தேதி மாநிலம் முழுவதும் 1 லட்சம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், வாக்கு எண்ணிக்கை நாளன்று வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மே 2 ஞாயிறு கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், முதல் நாள் இரவில் இருந்தே பாதுகாப்பு பணிகளை காவல் துறையினர் தொடங்குகின்றனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள காவல் துறையினரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!