தமிழகத்தில் இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவு – தேர்தல் ஆணையம் முக்கிய கண்டிஷன்!

0
தமிழகத்தில் இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவு - தேர்தல் ஆணையம் முக்கிய கண்டிஷன்!
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைய இருக்கிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரம்

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஒரு கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த முறை தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக அணிகள் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றனர். ஆனால் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. தேர்தல் பிரச்சாரம் நடைபெற்ற நிலையில், மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகள் வெளியாகி இருக்கிறது.

TNPSC தேர்வில் ஜெயிக்க ஜாக்பாட் வாய்ப்பு – மிஸ் பண்ணிடாதீங்க!

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் இன்று (ஏப்ரல் 17) மாலை 6 மணி உடன் முடிவடைய இருக்கிறது. அதனால் தேர்தல் பிரச்சாரத்திற்கு பின் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன் படி இன்று மாலை 6 மணிக்கு மேல் எந்த வகையிலும் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது எனவும் ஊடகங்கள், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட எந்த வகையிலும் பிரச்சாரம் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரச்சாரம் முடிந்ததும் வெளியூர் நபர்கள் வெளியேற வேண்டும். ஓட்டல்கள் விடுதிகளில் வெளியூர் நபர்கள் இல்லை என நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!