தமிழகத்திற்கு வர 3 மாநிலங்களுக்கு மட்டும் இ-பாஸ் கட்டாயமில்லை – அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருகிறது இருந்த போதிலும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ-பாஸ் கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இ -பாஸ் கட்டாயம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை அறிவித்துள்ளனர். அந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வர உள்ளது. மேலும் கடந்த ஆண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு இ-பாஸ் முறையை அறிமுகப்படுத்தியது. அதன்பின்னர் பல தளர்வுகள் காரணமாக இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தற்போது கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருவதால் மீண்டும் இ-பாஸ் முறை தொடங்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு, வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கும் இ-பாஸ் கட்டாயம் பெற வேண்டும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டது. மேலும் சுற்றுலா தலங்களுக்கு வரும் பயணிகளும் இ-பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டது.
பல்கலைக்கழக நேரடி வகுப்புகள் ரத்து – தொலைநிலைக்கல்வி இயக்ககம் அறிவிப்பு !
ஆனால் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ-பாஸ் முறை தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு இ-பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் https://eregister.tnega.org என்ற இணையதளம் மூலமாக தங்களது விவரங்களை பதிவு செய்து இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.