தமிழகத்தில் 10.5 சதவீத இடஒதுக்கீடு – உயர்கல்வித்துறை முக்கிய உத்தரவு!!
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடை அமல்படுத்த வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு:
தமிழக அரசு சார்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் 20 சதவிகித உள்ஒதுக்கீடில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளதாக அரசு தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஏற்கனவே வன்னியர் சமூகத்தினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர்.
CBSE 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் – முதல்வர் கோரிக்கை!!
தற்போது இந்த அறிவிப்பிற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் உயர்கல்வித்துறையின் கீழ் உள்ள அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள்ஒதுக்கீடை கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் அமல்படுத்த வேண்டும் என கல்வித்துறை செயலாளர் மோஹன்ராமன் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.