தமிழகத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு பரிசீலனை!!
தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டதை தொடர்ந்து கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கல்லூரிகளுக்கு விடுமுறை:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநில அரசுகள் கொரோனா விதிகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபாரதங்கள் விதிக்கப்பட உள்ளதாக உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் ஒரே நாளில் 1000 க்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.
TN Job “FB Group” Join Now
மேலும் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருவதால் மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் பள்ளிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை – ஆன்லைன் வகுப்புகள் தொடரும்!!
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளிலும் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி மாணவர்கள் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதால் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலினை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்து பரிசீலனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.