தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை – ஆன்லைன் வகுப்புகள் தொடரும்!!
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளிகள் இன்று முதல் காலவரையின்றி விடுமுறை வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பள்ளிகள் விடுமுறை:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. தமிழகம், குஜராத், மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரம் படுத்தப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகமாக பரவி வருகிறது.
TN Job “FB Group” Join Now
இதனால் மாநிலத்தில் பல பள்ளிகளில் மாணவர்களும் ஆசிரியர்களும் பாதிக்கப்படுகின்றனர் எனவே பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை பரிசீலனை செய்த தமிழக அரசு மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை இன்று முதல் விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை – பெற்றோர்கள் கோரிக்கை!!
ஏற்கனவே 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் மாணவர்களுக்கு அடிப்படை கல்வி அவசியம் என்ற நோக்கில் பள்ளிகள் நடத்தப்பட்டன. ஆனால் தற்போது கொரோனா அதிகரித்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலையை தடுக்க முதற்கட்டமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கல்லூரிகள் மூடுவது குறித்து அறிவிப்பு வெளியிடபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
12 வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என நான் தெரிவித்து கொள்கிறேன் இப்படிக்கு:12 ENGG BOYS GHSS Mayiladuthurai district…. Plz sir leave udunga😭😭😭
உன் எதிர்காலம் பாதிக்கப்படும்