தமிழக தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை – முதல்வர் அறிவிப்பு!!
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்ற முக ஸ்டாலின் அவர்கள் இன்று தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக கொரோனா சிகிச்சை வழங்கும் திட்டத்தில் கையெழுத்திட்டார். இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
முக்கிய திட்டங்கள்:
தமிழகத்தின் புதிய முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலை 9 மணி அளவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் பதவியேற்றுள்ளார். அவரை தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றனர். முதல்வராக பதவி ஏற்றதும் முதலில் தமிழகத்தின் நலனிற்கான கோப்புகளில் முக ஸ்டாலின் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ட்விட்டர் முகப்பு பக்கம் மாற்றம்!!
அதன்படி, முதல்வராக பதவி ஏற்றதும் ஸ்டாலின் அவர்கள் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். முதலில் கொரோனா நிவாரண நிதியாக அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4,,000 வழங்கும் திட்டத்தில் கையெழுத்திட்டார். அதன் முதல்படியாக இம்மாதமே இந்த திட்டத்தின் படி, ரூ.2,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், தமிழக தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைகாக அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக சிகிச்சை வழங்கப்படும் என்பது முக்கிய திட்டமாகும்.
இந்த திட்டத்தின் மூலம் சாதாரண மக்கள் மிகவும் பயனடைவார்கள் என்பதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். கடந்த ஆட்சியிலேயே தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்காக கூடுதல் கட்டண கொள்ளையில் ஈடுபட்டது தொடர்பாக புகார்கள் எழுப்பப்பட்டது. அதன் எதிரொலியாக முதல் நாளிலேயே புதிய முதல்வர் இந்த திட்டத்தை அமல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்