தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – ஆசிரியர்கள் வலியுறுத்தல்!!

0
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி - ஆசிரியர்கள் வலியுறுத்தல்!!
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி - ஆசிரியர்கள் வலியுறுத்தல்!!
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – ஆசிரியர்கள் வலியுறுத்தல்!!

தமிழகத்தில் மே 3ம் தேதி முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் அவர்களுக்கு தேர்வுக்கு முன்னதாக கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

கொரோனா தடுப்பூசி:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. பின்னர் ஜனவரி 19 முதல் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், அதற்கடுத்து பிப்ரவரி 8ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் 9 முதல் 11ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

ஓய்வூதியதாரர்களுக்கான புதிய அறிவிப்பு – EPFO இணையதளம் மூலம் தகவல்கள்!!

12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மே 3 முதல் 21ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுக்கத் தொடங்கி உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை கற்று வருகின்றனர். சட்டமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மற்றும் கொரோனா நோய்த்தொற்று ஆகிய காரணங்களால் பொதுத்தேர்வினை ஒத்திவைக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

நாட்டா நுழைவுத்தேர்வு விண்ணப்ப பதிவு – ஏப்ரல் 1 கடைசி நாள்!!

இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. பெற்றோர்கள் சிலர் கூறுகையில், பள்ளிகளில் ஆசிரியர்களே முகக்கவசம் அணியாமல் பாடம் நடத்துகின்றனர். இதனால் பள்ளி செல்லும் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாவது அலை தீவிரமடைய தொடங்கி உள்ளது. தினசரி 2000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மே மாதத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சத்தை அடைந்தால் தேர்வை நடத்துவது சிரமம். இதனால் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முன்னராகவே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டால் அச்சம் மற்றும் பாதிப்பும் குறையும் என தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!