ஓய்வூதியதாரர்களுக்கான புதிய அறிவிப்பு – EPFO இணையதளம் மூலம் தகவல்கள்!!
இபிஎப்ஓ (EPFO) எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் இணையதளம் மூலமாக பென்ஷன் பெறுபவர்கள் இனிமேல் தங்களது விவரங்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
ஓய்வூதியதாரர்களுக்கான அறிவிப்பு:
நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரிவோருக்கு அவர்களது ஓய்வூதிய காலத்தில் உதவியாக இருப்பதற்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஓவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெற பயனர்கள் அலுவலகங்களை நேரடியாக அணுக வேண்டும். ஆனால் தற்போது கொரோனா காலத்தில் வயதானவர்கள் நேரடியாக வருவது சிரமமான ஒன்றாகும்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் இபிஎப்ஓ எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஒரு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, ஓய்வூதியதாரர்கள் அவர்களுக்கு தேவையான ஓய்வூதியம் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள PF அலுவலகத்திற்கு நேரடியாக செல்ல தேவையில்லை. EPFO இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 68 ஆயிரம் பேருக்கு கொரோனா – 291 பேர் உயிரிழப்பு!!
அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றதும் PPO எண் மூலம் பென்சன் பெறுவார்கள். PPO என்பது ஒரு 12 இலக்க எண் ஆகும். இந்த எண் மத்திய பென்சன் அலுவலகத்துடன் தொடர்புகள் வைத்துக்கொள்ள பயன்படுகிறது. இந்த எண்ணை பயன்படுத்தி ஓய்வூதியதாரர்கள் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு கணக்குகளை மாற்றி கொள்ளலாம். இந்த எண்ணை EPFO மூலமாக எளிமையாக தெரிந்து கொள்ளலாம். எனவே ஓய்வூதியதாரர்கள் தங்களுக்கு தேவையான சாதாரண தகவல்கள் முதல் முக்கிய தகவல்கள் வரை இணையதளம் மூலமாகவே எளிதாக தெரிந்து கொள்ளலாம்.