தமிழகத்தில் கல்வியின் தரம் குறையவில்லை – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி!!
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டாலும் கல்வியின் தரம் குறையாமல் உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையன் அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி ஜனவரி மாதம் 19 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் 11 மாதங்களாக திறக்கப்படாத நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் பாடங்கள் நடத்தப்படுகின்றன.
பிப்ரவரி 22ம் தேதி 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறுகையில், “தமிழகத்தில் 11 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாத போதிலும் மாணவர்களுக்கு கல்வியின் தரம் குறையாமல் உள்ளது”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்