பிப்ரவரி 22ம் தேதி 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
மிசோரம் மாநிலத்தில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. 11 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது மத்திய அரசு அறிவித்த கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மிசோரத்தில் மேல்நிலை வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்கள் விடுதிகளில் அனுமதிக்கப்படவில்லை. தற்போது 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதும் விடுதிகளில் மாணவர்கள் தங்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் விடுதிகளில் தங்குவதற்கு 4 நாட்களுக்கு முன் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு நெகடிவ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தமிழக வருவாய் துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்ப கோரிக்கை – காலவரையற்ற போராட்டம்!!
மேலும் மாணவர்கள் கைகளை கழுவுதல், முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி போன்ற கொரோனா கட்டுப்பாடு விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தற்போது மேல்நிலை வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெறும் சூழ்நிலையை பொறுத்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் மார்ச் மாதம் முதல் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ஜேம்ஸ் லால்ரிஞ்சனா தெரிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்