தமிழகத்தில் 12 ஆம் பொதுத்தேர்வுகளில் மாற்றம் – தேர்வு இயக்ககத்திடம் கோரிக்கை!!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 12 ஆம் வகுப்புகள் அதிகப்படியான ஆன்லைன் முறையில் நடைபெற்றதால் தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பொதுத்தேர்வுகளில் மாற்றம்:
தமிழகத்தில் கொரோனா காரணமாக கல்வி நிறுவனங்கள் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இந்நிலையில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு காரணமாக 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் மாணவர்களுக்கு பல மாதங்களாக ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெற்று வந்தன.
தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் அதிகப்படியான பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் கிராம புற மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படவில்லை. அதனால் அவர்களுக்கு பாடங்களை நடத்தி முடிப்பதில் சிரமம் உள்ளது. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் விரைவாக பாடத்திட்டங்களை முடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆயக்குடி இலவச பயிற்சி மைய இயக்குனர் ராமமூர்த்தி கூறியதாவது,” கடந்த ஆண்டை போல இந்த ஆண்டு முழுவதும் வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட வில்லை. இதனால் மாணவர்களுக்கு தேர்வுக்கு தயாராகுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே தேர்வு முறையில் மாற்றம் தெரிவிக்க வேண்டும். அதாவது 50 மதிப்பெண்ணுக்கு எழுத்து தேர்வு மற்றும் 50 மதிப்பெண்ணுக்கு அகமதிப்பீட்டு தேர்வு என பிரித்து தேர்வு வழங்கப்பட வேண்டும்?” இவ்வாறு அவர் தெரிவித்தார்.