தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை – செய்முறை தேர்வுகள் நிறைவு!!
தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றுடன் (ஏப்ரல் 23) செய்முறை தேர்வுகள் முடிவடைய உள்ள நிலையில், பொதுத்தேர்வு அறிவிப்பு வெளியாகும் வரை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்து உள்ளது.
செய்முறை தேர்வுகள் நிறைவு:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் எதிரொலியாக ஏற்கனவே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில், 12ம் வகுப்பிற்கு கண்டிப்பாக பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மே 5ம் தேதி முதல் நடைபெற இருந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா 2வது அலையை கருத்தில் கொண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
ஏப்ரல் 16ம் தேதி தொடங்கிய செய்முறை தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 28 விதமான பாடங்களுக்கு தமிழகம் முழுவதும் உள்ள 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் தேர்வுகள் நடைபெற்றன. முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்றி மாணவர்கள் செய்முறை தேர்வுகளில் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் இன்றுடன் (ஏப்ரல் 23) தேர்வுகள் நிறைவடைகின்றது.
நாடு முழுவதும் மீண்டும் லாக்டவுன்? பிரதமர் மோடி தொடர் ஆலோசனை!
நேற்று வரை 85 சதவீத பள்ளிகளில் செய்முறை தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. இன்று சில பள்ளிகளில் தேர்வுகள் நடைபெறுகிறது. அது முடிவடைந்த உடன் 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு வரத் தேவையில்லை என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. மாணவர்கள் வீடுகளில் இருந்தபடி பொதுத்தேர்வுக்கு தயாராகுமாறும், பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் நுழைவுச்சீட்டு பெற மட்டும் பள்ளிகளுக்கு வருகை புரிந்தால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.