தமிழக மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவதை தவிர்க்க அறிவுறுத்தல்? கல்வித்துறையின் கட்டுப்பாடுகள்!
தமிழகத்தில் ஜூன் 13 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு மாணவர்கள் வழக்கம் போல நேரடியாக பள்ளிக்கு சென்று வரும் நிலையில், தற்போது கொரோனா பரவல் அதிகமாக பரவி வருவதை அடுத்து சில கட்டுப்பாடுகளை கல்வித்துறை பள்ளிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் 2 ஆண்டுகளில் கொரோனா வைரஸால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு மாணவர்கள் ஆன்லைன் மூலமாக வகுப்புகளை கவனித்து வந்தனர். அதன் பின் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பள்ளிகள் வழக்கம் போல நேரடியாக செயல்படத் தொடங்கியது. இந்நிலையில் கோடை விடுமுறை வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கை காரணமாக ஜூன் 12 ஆம் தேதி வரை கோடைவிடுமுறை விடப்பட்டது. அதன் பின் ஜூன் 13 ஆம் தேதி முதல் பள்ளிகள் வழக்கமாக செயல்படத் தொடங்கி இருக்கிறது.
Exams Daily Mobile App Download
தற்போது, 2 ஆண்டுகளுக்கு பின் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதால் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக பதிவாகி வருகிறது. சென்னையில் ஒரு நாள் பாதிப்பு 1000 ஐ நெருங்குகிறது. அதனால் கல்வி நிலையங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என பொதுசுகாதாரத் துறை கல்வித்துறையை அறிவுறுத்தி இருக்கிறது.
தமிழக சிவில் சப்லைஸ் கார்ப்பரேஷனில் (TNCSC) உதவியாளர் & கிளெர்க் வேலை – 650 பணியிடங்கள் அறிவிப்பு..!
இது குறித்து கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் மாணவர்களை முகக்கவசம் அணிய வைப்பது, அடிக்கடி கைகளை சுத்தம் செய்வது, மாணவர்களின் உடல் வெப்பநிலை சோதனை செய்வது போன்ற கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பள்ளிகளில் உடனே அமல்படுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் மாணவர்கள் காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.