IBPS அறிவித்துள்ள புதிய வேலைவாய்ப்பு – 6000+ காலிப்பணியிடங்கள்! முழு விவரம் இதோ!
இந்திய வங்கிகளில் காலியாக இருக்கும் கிளார்க் பதவிகளுக்கு எழுத்துத்தேர்வு மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்பட இருப்பதாக IBPS அறிவித்துள்ளது. இந்த பதவிக்கான தகுதி, வயது வரம்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை குறித்த விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.
வங்கி வேலைவாய்ப்பு
வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு மத்திய ஆட்சேர்ப்பு நிறுவனம் ஆகும். இந்த IBPS நிறுவனம் இந்தியா முழுவதும் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது கிளார்க் பதவிகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக IBPS அமைப்பு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப செயல்முறை ஆன்லைனில் தொடங்கியுள்ளது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் தகுதியை சரிபார்த்து IBPSன் ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த IBPS கிளார்க் பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 21, 2022 ஆகும். மேலும் விண்ணப்பத் திருத்தம், கட்டணம் செலுத்துதல் மற்றும் விண்ணப்பத்தை அச்சிடுதல் ஆகிய செயல்முறைகள் ஜூலை 21ம் தேதி முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், IBPS கிளார்க் பிரிலிம்ஸ் தேர்வு செப்டம்பரில் நடைபெறும் என்றும் மெயின் தேர்வு அக்டோபரில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவதை தவிர்க்க அறிவுறுத்தல்? கல்வித்துறையின் கட்டுப்பாடுகள்!
அதன்படி, IBPS ப்ரீலிம்ஸ் தேர்வில் தகுதி பெறும் விண்ணப்பதாரர்கள் IBPS மெயின் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்போது கிளார்க் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும். அதே நேரத்தில் விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 28 ஆண்டுகள் வரை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.