10 ஆம் வகுப்பில் காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாதவர்களுக்கு தேர்ச்சி இல்லை !
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் 10 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாதவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
10 ஆம் வகுப்பு பொது தேர்வு:
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு ஆண்டு முழுவதும் ஏப்ரல் மாதம் நடைபெறும். ஆனால் இந்த வருடம் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டதால், 10 ஆம் வகுப்பு பொது தேர்வை தமிழக அரசு ரத்து செய்து அனைவரும் ஆல் பாஸ் என்று உத்தரவு பிறப்பித்தது.
மேலும், அவர்களுக்கு மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு 80 சதவீதமும், வருகைப் பதிவேட்டினை வைத்து 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்பட உள்ளது. இந்த மதிப்பெண் பட்டியல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது.
ஏற்கனவே இந்த 10 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாவதில் பல்வேறு குளறுபடிகள் உள்ள நிலையில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை எழுதாத மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ஒரு சில பாடங்கள் தேர்வு எழுதாத மாணவர்களுக்கும் 10ம் வகுப்பு தேர்ச்சி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
my daughter was attend quraterly exam only so how to calculated mark and result