தமிழகத்தில் 1598 சிறப்பு ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – தேர்வர்கள் கோரிக்கை!!
தமிழகத்தில் சிறப்பாசிரியர் போட்டித்தேர்வு வருகிற ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி நடைபெறும் என்று அறிவித்த நிலையில், தற்போது வரை அதற்கான விண்ணப்ப பதிவு தேதி குறித்த தகவல் வெளிவராததால் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
சிறப்பாசிரியர் தேர்வு:
தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக அதிகமான அளவில் பரவி வருகிறது. இதனால் கடந்த ஆண்டு முதல் தேர்வுகள் சில ஆன்லைன் மூலமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1,598 சிறப்பாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
மேலும் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு வருகிற ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி இணையம் மூலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. சிறப்பாசிரியர் தேர்விற்கான விண்ணப்ப பதிவு மார்ச் மாதம் 31ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 25ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
சென்னையில் பள்ளி, கல்லூரிகள் கொரோனா முகாமாக மாற்றம் – கொரோனா தொற்று எதிரொலி!!
ஆனால் இதற்கான விண்ணப்ப பதிவு தள்ளிவைப்பதாக அறிவிப்பு வெளியானது. விண்ணப்ப பதிவு தள்ளிவைக்கும் அறிவிப்பு தேர்வர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பிலும் இதுவரை அறிவிப்பு ஒன்றும் வெளியாகவில்லை. விண்ணப்ப பதிவு தாமதமாகும் நிலையில் அறிவிக்கப்பட்ட தேதியில் தேர்வு நடைபெறுமா என்று தேர்வர்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.