சென்னையில் பள்ளி, கல்லூரிகள் கொரோனா முகாமாக மாற்றம் – கொரோனா தொற்று எதிரொலி!!
சென்னையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா நோய்த்தொற்று தினசரி இரண்டாயிரம் பேரை தாண்டி பாதித்து வருகிறது. தற்போது மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கொரோனா நோயாளிகளுக்காக படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகள்:
தமிழகத்தில் கடந்த ஆண்டை விட தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது பள்ளி (12ம் வகுப்பு தவிர்த்து) மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய தடுப்பு நடவடிக்கைகளும் அமலுக்கு வந்துள்ளது. மேலும் மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகளும் தீவிரமடைந்து வருகிறது.
சென்னை கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை – மாநகராட்சி உத்தரவு!
கடந்த ஆண்டு தமிழகத்தில் மிக அதிகமான அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தால் பள்ளி, கல்லூரிகள் சிறப்பு முகாம்களாக மாற்றப்பட்டன. அதன்படி பள்ளி மற்றும் கல்லூரிகளில் படுக்கை வசதிகள் அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அதே நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளனர். அந்த வகையில் தற்போது மீண்டும் சென்னையில் மூன்றடுக்கு படுக்கை வசதிகளை ஏற்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 9, 10ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை எச்சரிக்கை!!
அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு பெரிய மருத்துவமனையிலும், ஆக்சிஜன் உதவி தேவைப்படுபவர்களுக்கு சிறிய மருத்துவமனையிலும் மற்றும் அறிகுறி இல்லாமல் கொரோனா கண்டறியப்படும் நோயாளிகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளில் அனுமதித்து மருத்துவம் பார்க்க முடிவு செய்துள்ளனர். தற்போது அண்ணா பல்கலை, சென்னை பல்கலை, அம்பேதகர் பல்கலை ஆகியவற்றில் மொத்தம் 11,775 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.