தமிழக தனியார் பள்ளிகள் கல்வி கட்டண நிர்ணயம் – செப்.30 கடைசி நாள்!
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணம் நிர்ணயம் செய்வதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் செப்-30 ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யும்படி கட்டண நிர்ணய குழு அறிவித்துள்ளது.
தனியார் பள்ளி கல்வி கட்டணம் :
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்காக தமிழக அரசால் கல்வி கட்டண நிர்ணய குழு ஒன்று தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியன் பொறுப்பேற்றுள்ளார். இதனை தொடர்ந்து தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணம் நிர்ணயம் செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு – இன்றைய நிலவரம்!
இந்நிலையில் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்கு கல்வி கட்டணத்தை நிர்ணையம் செய்வதற்கான பரிந்துரை விண்ணப்பங்களை செப் 1 ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும் என்று கட்டண நிர்ணய குழு அறிவித்திருந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று பரவலின் காரணமாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் செப்-30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
அக்.4 வரை 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
ஆனாலும் 1,700 பள்ளிகளே இதுவரை கட்டண நிர்ணய பரிந்துரை விண்ணப்பங்களை முழுமையான ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் அனைத்து பள்ளிகளும் விரைந்து தங்களது கல்வி கட்டண நிர்ணய பரிந்துரை விண்ணப்பங்களை கடந்த கல்வி ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கையுடன் இணைத்து tnfeecommittee.com என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்திடுமாறு கட்டண நிர்ணய குழு அறிவித்துள்ளது.