அக்.4 வரை 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
கொரோனா 2 ஆம் அலை தொற்றினால் ஏற்படும் புதிய பாதிப்புகளை கவனத்தில் கொண்டு ஸ்ரீநகர் பகுதியில் அக்டோபர் 4 ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு விதிப்பு
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் பகல் நேரங்களில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள், வார இறுதி பொது முடக்கம் அனைத்தும் இதுவரை ஒவ்வொன்றாக தளர்த்தப்பட்டது. இதை தொடர்ந்து வணிக சேவைகள், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தும் அரசு அனுமதியுடன் செயல்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் அக்.30 வரை முழு ஊரடங்கு அமல்? உண்மை நிலவரம் இதுதான்!
இந்நிலையில் சமீபகாலமாக ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள ஸ்ரீநகர் பகுதிகளில் கொரோனா பரவல் தினசரி பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த பாதிப்புகளை கருத்தில் கொண்டு நேற்று (செப்டம்பர் 24) முதல் நகரத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் 10 நாட்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் ஸ்ரீநகரின் ஜடிபால் மற்றும் லால் பஜார் நகராட்சி வார்டுகளின் கீழ் வரும் பகுதிகளில் கடுமையான ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 4ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு? குழப்பத்தில் அரசு!!
இதனுடன் முழு ஊரடங்கு காலங்களில் அனைத்து கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் பிற வணிகங்கள் 10 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது மக்களின் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தனித்து இயங்கும் பால், காய்கறி மற்றும் மளிகைக் கடைகள் செயல்படவும் அரசு அனுமதி கொடுத்துள்ளது.