தமிழ்நாடு – கர்நாடகா இடையேயான காவிரி அணை விவகாரம் – தண்ணீர் திறந்து விட முடியாது.. அரசு திட்டவட்டம்!
தமிழ்நாடு – கர்நாடகா இடையேயான தண்ணீர் விவகாரம் தொடர்பான ஆய்வு கூட்டம் கர்நாடக மாநில முதல்வர் தலைமையில் இன்று நடைபெற்றது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
காவிரி தண்ணீர் விவகாரம்:
தமிழ்நாடு கர்நாடகா இடையே தண்ணீர் பங்கீடு பிரச்சனை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. தற்போது தண்ணீர் பிரச்சனை மீண்டும் தலை தூக்கி உள்ளது. அதாவது காவேரி அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் தண்ணீரை திறந்து விட முடியாது என கர்நாடக அரசு திட்ட வட்டமாக தெரிவித்துள்ளது. இதற்கு மத்தியில் தமிழக அரசு 24,000 கன அடி தண்ணீரை திறக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
Join Our WhatsApp Group” for Latest Updates
இது தொடர்பான வழக்கு விசாரணையில் 5,000 கன அடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என காவேரி மேலாண்மை ஆணையம் தெரிவித்தது. ஆனால் தமிழகத்திற்கு தண்ணீரை திறக்க முடியாது என கர்நாடக மறுத்துள்ளது. இந்த நிலையில் மாநில முதல்வர் சித்தராமையா தலைமையில் சிறப்பு அவசரக் கூட்டம் இன்று நடைபெற்றது.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு வந்த நல்ல செய்தி – அடுத்தடுத்து வரும் அரசு அப்டேட்!
இதில் அரசியல் கட்சிகளை சார்ந்த பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிட ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.