சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை குறைந்து வருவதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை:
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் அனைத்து தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதனால் அதிகமான மக்கள் தங்கத்தில் முதலீடு செய்தனர். இதனால் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அரசின் முயற்சியால் கொரோனா கட்டுக்குள் வந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடைகள், அலுவலகங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியது. இதனால் தங்கம் விலை சற்று ஏற்ற இறக்கத்தை கண்டது. பொதுவாக சுபமுகூர்த்த தினங்கள், பண்டிகை காலங்களில் தங்கத்தின் விலை அதிகரித்தே காணப்படும்.
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
ஒரு நாளில் தங்கம் விலை காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் மாறுபடுகிறது. இந்த நேரத்தில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரின் தாக்கத்தால் ஏற்பட்ட பங்கு சந்தை சரிவால் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்தது. 36,000 ஆக இருந்த தங்கம் விலை 40,000 ஐ எட்டியது. இதனால் நகை பிரியர்கள் திருமணத்திற்கு நகைகள் வாங்க முயற்சித்தவர் அதிர்ச்சி அடைந்தனர். எப்போது போர் முடிவுக்கு வரும் தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை சற்று குறைந்து வருகிறது.
அந்த வகையில் இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.38,248-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் ரூ.4,781-க்கு விற்பனையாகி வருகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.90-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று தங்கம் விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.