‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – அகிலன் சொன்ன அப்டேட்! ரசிகர்கள் உற்சாகம்!

0
'பாரதி கண்ணம்மா' சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - அகிலன் சொன்ன அப்டேட்! ரசிகர்கள் உற்சாகம்!
'பாரதி கண்ணம்மா' சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - அகிலன் சொன்ன அப்டேட்! ரசிகர்கள் உற்சாகம்!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – அகிலன் சொன்ன அப்டேட்! ரசிகர்கள் உற்சாகம்!

இரண்டு குழந்தைகளும் இரு துருவங்களில் உள்ளது போல் பாரதியிடம் ஹேமாவும், கண்ணம்மாவிடம் லட்சுமியும் வளர்ந்து வருகிறார்கள். இருவரும் எப்போது சேர்வார்கள்? குழந்தைகளுக்கு அம்மா அப்பா இருவர் பாசமும் எப்போது கிடைக்கும்? என்ற பல கேள்விகளுக்கு மத்தியில் நேற்றைய எபிசோடில் அகிலன் சொன்ன விஷயம் ரசிகர்களின் கேள்விக்கு பதிலாக உள்ளது.

அகிலன் சொன்ன விஷயம்:

பாரதி கண்ணம்மா தொடரில் அப்பா யாரென தேடி அலைந்த லட்சுமியின் கேள்விக்கு பதில் கிடைத்ததை தொடர்ந்து நேற்று எபிசோட்டில் லட்சுமி பள்ளிக்கு செல்லாததை அறிந்த கண்ணம்மா தனது குழந்தையை தேடி ஒவ்வொரு இடமாக அலைகிறார். பிறகு இதை பாரதியிடம் தெரிவுபடுத்துவதற்க்காக அவர் இருக்கும் ஹாஸ்பிடலுக்கு செல்கிறார். அங்கு எப்போதும் போல பாரதியும், வெண்பாவும் பேசிக் கொண்டிருப்பதை கண்ட கண்ணம்மா மனதிற்க்குள் கோபத்தை அடக்கி விட்டு சொல்ல வந்த விஷயத்தை கூறுகிறார்கள்.

பதற்றமடைந்த பாரதி என்னாச்சு என்று கேட்பதற்குள் வெண்பா நடுவில் சென்று பாரதி மற்றும் கண்ணம்மாவை கலாய்க்க, பாரதி உடனே ரியாக்ட் செய்யாமல் நடிக்கிறார். இதனால் மேலும் வெறுப்பான கண்ணம்மா வெண்பாவிடம் வாக்குவாதத்தில் இறங்க பாரதியோ வெண்பாவுக்கு சப்போர்ட் செய்து கண்ணம்மாவை திட்டி வெளியே அனுப்புகிறார். அதன் பிறகு லட்சுமி தனது அப்பா பாரதி பார்க்க ஹாஸ்பிடலுக்கு வருகிறாள். அவளை கண்ட பாரதிக்கு சந்தோஷம், உடனே அவளை பார்த்து எங்கு சென்றாய்? என்ற கேள்வியை கேட்க அவளோ அப்பாவை கண் எடுக்காமல் பார்த்து மனதுக்குள் அப்பா என்று சொல்லி சந்தோசப்படுகிறாள்.

இந்த பக்கம் ஹேமா, லட்சுமி ஸ்கூலுக்கு வராததயும், சமையல் அம்மா சாப்பாடு கொண்டு வராததயும் நினைத்து வருந்தி தனது பாட்டியிடம் சொல்ல உடனே சௌந்தர்யாவும் பதற்றத்தில் என் மூத்த பேதி என்று உளறுகிறார். சந்தேகம் எழுந்த ஹேமா என்ன சொன்னிங்க என்று மீண்டும் கேட்க பாட்டியும் மழுப்பி விட்டார். இதையெல்லாம் பார்த்த அகிலன் என்னிக்காவது ஒரு நாள் கண்டிப்பாக ஹேமாவுக்கு உண்மை தெரிய வரத்தான் போது அப்போ அவ லட்சுமி மற்றும் கண்ணம்மாவை வீட்டுக்கு அழைத்து வரத்தான் போறாள், அத யாராலயும் தடுக்க முடியாது ஏன்! பாரதி நினைச்சாலும் முடியாது என்று மனதில் பட்டத்தை பட்டுனு சொல்வதுடன் எபிசோட் முடிந்தது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!