தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு இதுவரை எத்தனை ரேஷன் கார்டுகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது மற்றும் ரேஷன் கடைகளில் முதியவருக்குண்டான சிரமத்தை போக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.
ரேஷன் கடைகள்:
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பல லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் பயன் பெற்று வருகின்றனர். அதாவது அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை முதலான பல அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப அட்டை யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்றும், தகுதியுள்ள நபருக்கு 15 நாட்களுக்குள் குடும்ப அட்டை விநியோகம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
பிரதான் மந்திரி கிசான் (PM Kisan) திட்டத்தில் உள்ளவர்கள் கவனத்திற்கு – ஆதார் இணைப்பு கட்டாயம்!
அதன்படி நேற்று நடந்து முடிந்த பேரவையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு எத்தனை பேர் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்துள்ளனர் மற்றும் எத்தனை குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, திமுக ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் குடும்ப அட்டை வழங்க கோரி கிட்டத்தட்ட 15,74,543 விண்ணப்பங்கள் வந்துள்ளனர். இந்த விண்ணப்பங்களில் தகுதியான 10,92,064 பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ரேஷன் கடைகளில் முதிவரின் கைரேகை சரியாக பதியாத காரணத்தினால் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாமல் திருப்பியனுப்பும் சூழல் ஏற்பட்டு வருகிறது. இதனை சரிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா என பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பிராாக்ஸி முறையில் மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என கூறியுள்ளார். அதாவது அவர்களின் குடும்பத்தில் உள்ள 5 வயதிற்கு மேற்பட்ட யாராக இருந்தாலும் ரேஷன் பொருட்களை பெற்று கொள்ளலாம் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.