தமிழகத்தில் நாளை (மார்ச் 24) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை(மார்ச் 24) காலை 9 மணி முதல் மதியம் 2 வரை பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்பட இருப்பதாக மின் வாரியம் சார்பில் அறிவித்து உள்ளனர்.
மின்தடை:
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடப்பதற்கான காரணங்கள், மின் கம்பங்களில் ஒரு சில நேரங்களில் ஏற்படும் மின்கசிவு மூலம் விபத்துகள் நடப்பதை தவிர்ப்பதற்காக பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. மக்களுக்கு மின்சாரம் ஒரு முக்கிய அத்தியாவசிய தேவையாக ஆகிவிட்டது. தமிழ்நாட்டில் மின்சாரம் தடை படாமல் கிடைக்க வேண்டும் என்றால் மின் ஊழியர்கள் மூலமாக மாதந்தோறும் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் அனைத்து மாவட்டங்களிலும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும்.
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
இவ்வாறு பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். மேலும் மின் தடை ஏற்பட உள்ள பகுதிகளுக்கு முன்னரே அறிவிப்புகளும் சென்று விடும். இந்நிலையில் தற்போது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் நாளை(மார்ச் 24) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று நாமக்கல் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ஆ. சபாநாயகம் தெரிவித்து உள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள், நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிபட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசுவம்பட்டி, ரெட்டிபட்டி, தூசூர், முதலைப்பட்டி, போதுபட்டி, என்ஜிஓஓ காலனி, வீசாணம், சின்ன முதலைப்பட்டி ஆகிய இடங்களை சுற்றியுள்ள உள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.