சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்துள்ளது. இந்த வாரத்தின் தொடக்க நாளிலேயே தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தொழில் நிறுவனங்கள் இதுவரை காணாத சரிவை சந்தித்தது. இந்த நேரத்தில் மக்கள், தொழில் நிறுவனங்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை விரும்பினர். இதனால் தங்கம் விலை தினந்தோறும் உயர்வைக் கண்டு வருகிறது. அதன் பிறகு கொரோனா கட்டுக்குள் வந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடைகள், அலுவலகங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியதும். இதனால் தங்கம் விலை சற்று ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.
தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இறுதித் தேர்வு தேதி வெளியீடு!
அதனை தொடர்ந்து ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரின் தாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியாலும் தங்கம் விலை உயர்ந்தது. தங்கம் விலை 40,000 ஐ எட்டியது. இதனால் நகைப் பிரியர்கள் மற்றும் திருமணத்திற்கு நகைகள் வாங்க முற்படுவோர் சிரமத்தை எதிர்கொண்டனர். கடந்த வாரத்தில் இருந்து சற்று தங்கம் விலை குறைந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.136 குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ExamsDaily Mobile App Download
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 39,424 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4,926 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 70.80 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிலோ வெள்ளி 70, 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த வாரத்தை தொடர்ந்து நடப்பு வாரமும் தங்கம் விலை குறைந்து வருவதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தற்போது விலை குறைந்துள்ள போதே நகைகள் வாங்கவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.