தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இறுதித் தேர்வு தேதி வெளியீடு!
சென்னையில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வருகிற மே 6ம் தேதி முதல் முழு ஆண்டு தேர்வுகள் நடத்தப்படும் என்று சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்திருக்கிறார்.
முழு ஆண்டு தேர்வு:
தமிழகத்தில் கடந்த 2 வருட காலமாக கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கபடாமல் இருந்தன. தற்போது கொரோனா மூன்றாம் அலை பாதிப்புகள் குறைந்த நிலையில் பொதுமக்கள் நலன் கருதி ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகள் நடத்த அரசு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் தமிழகத்தில் 1-12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
அனைத்து பள்ளிகளுக்கும் மே 2 முதல் ஜூன் 13 வரை கோடை விடுமுறை – மாநில அரசுக்கு பரிந்துரை!
கடந்த 2 வருடமாக மாணவர்களுக்கு தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் இந்த வருடம் மே மாதம் பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. மேலும் அடுத்த, 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு மே மாதம் 13 ஆம் தேதி வரை பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 13 ஆம் தேதியில் இருந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
ExamsDaily Mobile App Download
இந்த நிலையில், மாணவர்களுக்கு அதிகமாக விடுமுறை விடப்பட்டதால் மாணவர்களுக்கு சனிக் கிழமைகளிலும் பள்ளி வேலை நாளாக அறிவிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் மட்டும் மே மாதத்தில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அடுத்த வருடத்தில் இருந்து எப்போதும் போல் ஏப்ரல் மாதத்தில் தேர்வுகள் நடத்தப்படும் என கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருக்கிறார். அதனடிப்படையில் சென்னையில் மே 5 ம் தேதி முதல் 6-9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் நடத்தப்படுவதாக சென்னை மாவட்ட முதன்மை அலுவலர் அறிவித்திருக்கிறார்.