தமிழ்நாடு செய்திகள் – ஜூலை 2018
மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 2018
இங்கு ஜூலை மாதத்தின் தமிழ்நாடு செய்திகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.
தமிழ்நாடு செய்திகள் – ஜூலை 2018:
தலைநகர் | முதல் அமைச்சர் | ஆளுநர் |
சென்னை | எடப்பாடி கே. பழனிசாமி | பன்வரிலால் புரோஹித் |
இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக பொறுப்பேற்றார் சத்ய ஸ்ரீ
- ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த சத்ய ஸ்ரீ இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
முதுமலையைச் சுற்றியுள்ள பகுதி சுற்றுச்சூழல்-உணர்திறன் மண்டலமாக அறிவிக்கப்பட்டது
- நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு அருகிலுள்ள கட்டுமான மற்றும் வணிக சுரங்க நடவடிக்கைகளை தடைசெய்வதுடன் அருகே உள்ள ஹோட்டல்களையும் ஓய்வு விடுதிகளையும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் 438 சதுர கி.மீ. அளவில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் (ESZ) என சுற்றுச்சூழல், வனப்பகுதி மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் வரைவு அறிவிப்பை வெளியிட்டது.
தமிழ்நாடு இறுதியாக லோக் ஆயுக்தாவை அமைத்தது
- மாநிலத்தில் லோக் ஆயுக்தாவை நிறுவுவதற்காக உச்சநீதிமன்றம் விடுத்த காலக்கெடு முடிவடைவதற்கு ஒரு நாள் முன்னதாக, தமிழ்நாடு சட்டமன்றம் ஊழல் எதிர்ப்பு குழுவை உருவாக்குவதற்கான சட்டத்தை இயற்றியது.
சென்னையில் கிராம உணவு விழா நடக்கிறது
- ‘உழவர், உணவு மற்றும் உணர்வுக்கான கிராம டிக்கெட்’, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சமையல்காரர்கள் பங்கேற்று 300 க்கும் அதிகமான உணவு வகைகளை தயாரிப்பார்கள்.
தமிழ்நாட்டில் ஏழு நினைவு சின்னங்களை மேம்படுத்தவுள்ளது ஏ.எஸ்.ஐ.
- தமிழ்நாட்டின் ஏழு தளங்களில் உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலா-நட்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், தொல்பொருள் ஆய்வு மையம் மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் பணிகளை ஏற்கனவே துவக்கி உள்ளது.
- தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில், வேலூர் கோட்டை, காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோயில், சித்தன்னவாசல் குகைகள்,மாமல்லபுரம் கடற்கரை கோவில், செஞ்சிக் கோட்டை மற்றும் கொடம்பலூரிலுள்ள மூவர் கோயில் ஆகியவை கலாச்சார அமைச்சகத்தால் மேம்படுத்தப்படவுள்ள ஆதர்ஷ் நினைவுச்சின்னங்கள் ஆகும்.
அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடு அக்டோபர் மாதம் முதல் கணினி மயம்
- கருவூலக் கணக்குத் துறையில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டத்தின் ஒரு பகுதியான ‘ஆன்லைன் பில் பாசிங் சிஸ்டம்’ மற்றும் இஎஸ்ஆர் (பணிப்பதிவேடு கணினி மயம்) அக்டோபர் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
தமிழ் நாடு அரசாங்கம் கலப்பு சாதி தம்பதிகளுக்கான 24 மணி நேர ஹெல்ப்லைனை அமைக்கிறது
- தமிழக அரசு கலப்பு சாதி தம்பதியினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விசாரிக்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் பாதுகாப்பை வழங்கவும் 24 மணி நேர ஹெல்ப்லைன் அமைக்கப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதி மன்றத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது.
புதை சாக்கடையை சுத்தம் செய்ய ஒரு ரோபோ
- தமிழகத்தில் புதை சாக்கடை குழாய்களில் உள்ள அடைப்புகளை அகற்றும் தானியங்கி இயந்திரம் வாங்கும் முதல் நகரமாகிறது கும்பகோணம்.
ஸ்டான்லி நீர்த்தேக்கம் முழுத்திறனை அடைந்துள்ளது
மேட்டூரில் ஸ்டான்லி நீர்த்தேக்கம் அதன் முழு நீர்த்தேக்க நிலையான (FRL) 120 அடி உயரத்தை அடைந்தது, 39 வது தடவையாக அணை நீர்மட்டம் அதன் 85 ஆண்டு வரலாற்றில் முழுத் திறனை அடைந்துள்ளது. இதற்கு முன் ஆகஸ்ட் மாதம் 2013 ல் நடந்தது.
2018 தினசரி நடப்பு நிகழ்வுகள் கிளிக் செய்யவும்