இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ‘டேக் எ பிரேக்’ அறிமுகம்!
இந்தியாவில் சமூக வலைதளங்கள் பலவற்றை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில் இளைஞர்கள் இன்ஸ்டாகிராம் என்ற செயலியை அதிக நேரம் பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர். அதனால் தற்போது இதில் புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
டேக் எ பிரேக்
இந்தியாவில் ஏராளமான சமூக வலைதளங்கள் பயன்பாட்டில் உள்ளது. அதில் இளைஞர்கள் அதிக நேரம் செலவிடும் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இன்ஸ்டாகிராமில் கோடிக்கணக்கான பயனர்கள் உள்ளனர். அதனால் பயனர்களின் வசதிக்காகவும் பாதுகாப்புக்காகவும் ஒரு புதிய வசதியை இந்நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ளது. தற்போது இளைஞர்கள் அதிக நேரம் தொடர்ச்சியாக சிறிய இடைவெளியின்றி பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.
நாளை (பிப்.6) மீண்டும் முழு ஊரடங்கு – அரசு அதிரடி அறிவிப்பு!
இதனை தடுக்கும் வகையில் ‘டேக் எ பிரேக்’ என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் போது இடைவெளி எடுக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. இந்த அம்சத்தை பயன்படுத்த ‘டேக் எ பிரேக்’ ஆப்ஷனை ‘ஆன்’ செய்து வைத்து அதில் 30,20,10 நிமிடங்கள் என்ற ஆப்ஷனில் ஏதேனும் ஒன்றை உங்கள் வசதிக்கேற்ப தேர்ந்தெடுக்க வேண்டும். இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் போது தேர்வு செய்த அந்த குறிப்பிட்ட இடைவெளியில் ‘டேக் எ பிரேக்’ என்பது திரையில் காண்பிக்க வேண்டும்.
தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு? முதல்வருக்கு கோரிக்கை!
இது இடைவெளி எடுக்க வேண்டிய நேரம் என்று எச்சரிக்கை செய்யும். இந்த இடைவெளியில் தங்களது விருப்பத்துக்கேற்ப மூச்சை இழுத்து விடுங்கள், உங்களுக்கு தோன்றுவதை எழுதுங்கள், உங்களுக்குப் பிடித்த பாடலை கேளுங்கள், நீங்கள் செய்ய திட்டமிட்டதை செய்யுங்கள் என்பது திரையில் காண்பிக்கப்படும். ‘டேக் எ பிரேக்’ என்ற புதிய அம்சம் அமெரிக்கா, இங்கிலாந்து, அயர்லாந்து, கனடா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இப்போது உலக முழுவதும் அனைத்து நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.