நாளை (பிப்.6) மீண்டும் முழு ஊரடங்கு – அரசு அதிரடி அறிவிப்பு!

0
நாளை (பிப்.6) மீண்டும் முழு ஊரடங்கு - அரசு அதிரடி அறிவிப்பு!
நாளை (பிப்.6) மீண்டும் முழு ஊரடங்கு - அரசு அதிரடி அறிவிப்பு!
நாளை (பிப்.6) மீண்டும் முழு ஊரடங்கு – அரசு அதிரடி அறிவிப்பு!

கேரள மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

முழு ஊரடங்கு

இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் தொடங்கியதை தொடர்ந்து பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தியது. அதனால் தற்போது பல்வேறு மாநிலங்களில் தொற்று பரவல் குறைய தொடங்கியுள்ளது. தமிழகத்திலும் 3ம் அலையின் தாக்கம் குறைந்து வந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு? முதல்வருக்கு கோரிக்கை!

இந்த நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் ஒரு நாள் கொரோனா தொற்று பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இரண்டு நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்வதில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவலை மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

எம்எஸ் தோனி, விராட் கோலியின் முதல் ஐபிஎல் சம்பளம் – ஆச்சிரியமூட்டும் தகவல்!

அதன்படி கடந்த 2 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து வர இருக்கும் ஞாயிற்றுக்கிழமையான பிப்ரவரி 6ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த முழு ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளிவர வேண்டும் என்று அறிவித்துள்ளது. மேலும் இந்நேரத்தில் மருந்தகங்கள், உணவகங்களில் பார்சல் சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து தொற்று பரவலை பொறுத்து அடுத்த வாரம் 13ம் தேதி அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தபடுவது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!