எம்எஸ் தோனி, விராட் கோலியின் முதல் ஐபிஎல் சம்பளம் – ஆச்சிரியமூட்டும் தகவல்!
முன்னாள் இந்திய கேப்டன்களான விராட் கோலி மற்றும் எம்.எஸ். தோனி இருவரும் இன்று வரை இந்தியாவில் மிகவும் போற்றப்படும் கிரிக்கெட் வீரர்களாக உள்ளனர். இந்நிலையில் இருவரின் முதல் ஐபிஎல் சம்பளம் குறித்து இப்பதிவில் காண்போம்.
முதல் ஐபிஎல் சம்பளம்:
தோனி 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.ஆனால் அவர் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)க்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்கு முன்னதாக , சிஎஸ்கே தோனியைத் தக்க வைத்துக் கொண்டது. இந்நிலையில் இந்த ஆண்டு IPL ஏலத்தில் தோனி கலந்து கொள்ள உள்ளார். 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்றதன் மூலம், 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் ஏலத்தில் எம் எஸ் தோனி சென்னை அணிக்கு ஏலம் போனார். இன்று வரை சென்னை அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
Post Office இல் 150 ரூபாய் முதலீட்டில் 20 லட்சம் வரை ரிட்டன்ஸ் – அருமையான சேமிப்பு திட்டம்!
2008 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் தோனியை 6 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இவரது கேப்டன்ஷிப்பில் சென்னை அணி மொத்தம் 4 முறை IPL கோப்பையை வென்றுள்ளது. இம்முறை 12 கோடி ரூபாய்க்கு மீண்டும் தோனி தக்கவைக்கப்பட்டார். இதை தொடர்ந்து விராட் கோலி சமீபத்தில் RCB அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் . கோஹ்லி 2008 இல் இந்திய U-19 அணியின் கேப்டனாக இருந்து இந்தியாவை வழிநடத்தினார் 2008 ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸின் ரேடாரில் முதலில் விளையாடினார்.
தமிழகத்தில் 2 வருடங்களாக இலவச லேப்-டாப்கள் வழங்காதது ஏன்? அரசு தரப்பு விளக்கம்!
2009 ஆண்டு நடைபெற்ற IPL ஏலத்தில் கோஹ்லியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 12 லட்ச ரூபாய்க்கு எடுத்து. பின்னர் அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும் 2017, 2018 ஆண்டுகளில் ஐபிஎல்லில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த ஆண்டு ஏலத்திற்கு முன்னதாக RCB யால் 15 கோடி ரூபாய் மதிப்பில் தக்கவைக்கப்பட்டார். இம்முறை RCB அணியில் சிறப்பாக விளையாட உள்ளேன் என்று சமீபத்தில் பேட்டியளித்தார்.