தாஜ்மஹால் மே 15 ஆம் தேதி வரை மூடல் – அரசு உத்தரவு!!

0
தாஜ்மஹால் மே 15 ஆம் தேதி வரை மூடல் - டெல்லி அரசு உத்தரவு!!
தாஜ்மஹால் மே 15 ஆம் தேதி வரை மூடல் - டெல்லி அரசு உத்தரவு!!
தாஜ்மஹால் மே 15 ஆம் தேதி வரை மூடல் – டெல்லி அரசு உத்தரவு!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால், தடுப்பு நடவடிக்கையாக மே மாதம் 15 ஆம் தேதி வரை தாஜ்மகாலை மூடுவதற்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

தாஜ்மஹால் மூடல்

நாடு முழுவதும் பெருகி வரும் கொரோனா தொற்று காரணமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. தமிழகத்திலும் கோவில்கள், மத வழிபாட்டு தலங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல சுற்றுலா தலங்கள், கடற்கரைகளில் 50% வரை மக்கள் கூடலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

முன்னதாக கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டிருந்தது. இதனால் மத்திய அரசுக்கு சுற்றுலாத்துறையின் மூலம் கிடைக்கும் வருவாய்களில் பெருமளவு இறக்கத்தை சந்தித்தது. மீண்டுமாக கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா பரவலின் வேகம் குறைந்து வந்ததை தொடர்ந்து மூடப்பட்டிருந்த வழிபாட்டு தலங்களும், சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டன.

மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனுமதி இல்லை – தமிழக அரசு திட்டவட்டம்!!

இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் மீண்டுமாக அதிகரித்து வருகிறது. அதனால் தாஜ்மஹால் உள்ளிட்ட புராதான தலங்களில் சுற்றுலா பயணிகள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே மாதம் 15 ஆம் தேதி வரை தாஜ்மஹாலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை ரத்து செய்வதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!