TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வு முறை எப்படி? முழு விவரம்!
தமிழகத்தில் குரூப்-2, 2A பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மார்ச் 23 ந் தேதி கடைசி நாள் ஆகும். மேலும் குரூப்-2, 2A தேர்வுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். குரூப்-2, 2A தேர்வு முறை குறித்த முக்கிய தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.
முழு விவரம்:
TNPSC மூலம் நடத்தப்படும் குரூப் 2, குரூப் 2A தேர்வு அறிவிப்பு கடந்த 18ம் தேதி வெளியானது. இந்த தேர்வு வாயிலாக 5,831 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு அடிப்படையில் தேர்வர்கள், தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 23 ஆகும். குரூப் 2 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதார்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இருப்பினும், கூட்டுறவுத்துறை சார்ந்த சில பதவிகளுக்கு டிப்ளமோ படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்.
500 ராக்கெட் லான்சர்ஸ், 1000 டாங்கி எதிர்ப்பு கருவிகள் – உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் உலக நாடுகள்!
மேலும் குரூப் 2 பதவிகளுக்கான வயது தகுதி, பொதுபிரிவினருக்கு 18 முதல் 32 வரை ஆகும். இதில் பிற வகுப்பினர்களுக்கு வயது வரம்பு கிடையாது. இந்த வகையில் நேர்முகத்தேர்வு பதவிகளுக்கு 116 இடங்களுக்கும், நேர்முக தேர்வு அல்லாத பதவிகளுக்கு 5413 இடங்களுக்கு தேர்வு நடைபெறும்.மேலும் குரூப் 2 பதவிகளுக்கான தேர்வு முறை முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று படி நிலைகளில் நடைபெறும் மற்றும் மற்றும் குரூப் 2A பதவிகளுக்கு முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு மட்டும் நடைபெறும். இந்த பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. இந்த நிலையில் முதல்நிலைத் தேர்வு இரண்டு பிரிவுகளாக நடைபெறும்.
தமிழகத்தில் மார்ச் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
முதல் பிரிவில் தமிழ் அல்லது ஆங்கிலம் மொழிப்பாடத்தில் இருந்து 100 வினாக்களும், இரண்டாம் பிரிவில் பொது அறிவு பகுதியில் 75 வினாக்களும், கணிதப் பகுதியில் 25 வினாக்களும் என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். முதன்மைத் தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும். அந்த வகையில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு,இரண்டாம் தாள் பொது அறிவு பகுதியிலிருந்து விரிவான விடையளித்தல் தேர்வாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. முதன்மைத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர் மற்றும் அதிலும் தகுதி பெறுபவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிடங்கள் வழங்கப்படும்