தனக்கு குழந்தை பிறக்காது என்பதை அறிந்த முல்லை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இந்த வாரம்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதிர் எதையோ மறைகிறார் என்று புரிந்து அதை அறிந்து கொள்ள முயற்சிக்கும் சமயத்தில் தனக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்பதை அறிந்து கொள்கிறார். இதனால் சீரியலில் புதிய திருப்பங்கள் வர இருக்கிறது.
முல்லையின் ரகசியம்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடந்த வாரம் முழுவதும் கடை திறப்பு விழா மற்றும் அதன் பிறகு ஜீவா குடித்து விட்டு செய்த அட்டகாசங்கள் தான் சென்று வந்தது. இனி இந்த வாரம் கதை வேறு பக்கத்தை நோக்கி நகர இருக்கிறது. இந்த கடை திறப்பு விழா சமயத்தில் மட்டும் தான் முல்லை குழந்தையை பற்றி யோசிக்காமல் இருந்தார். இனி மீண்டும் அதை பற்றி கவலை பட தொடங்குகிறார். முல்லையின் மருத்துவ ரிப்போர்ட்டை கதிர் லாக்கரில் வைத்து பூட்டி சாவியை தான் வைத்துக் கொள்கிறார். இதனால் முல்லைக்கு கதிர் எதையோ மறைகிறார் என்று தெரிகிறது.
விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் “முல்லை வளைகாப்பு விழா” – வைரலாகும் ப்ரோமோ!
இதனால் அவரிடம் சண்டை போட்டு சாவியை வாங்கி பார்த்தால் மருத்துவ ரிப்போர்ட் தான் இருக்கிறது. இதனால் அதில் எதோ சிக்கல் என்று தெரிந்து மருத்துவமனைக்கு சென்று கேட்க அங்கு முல்லைக்கு குழந்தை தானாக பிறக்க வாய்ப்பில்லை என்பது தெரிய வருகிறது. இதனால் முல்லை மிகவும் மனம் உடைந்து போகிறார். இதன் பிறகு கதிரிடம் வந்து சண்டை இடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இந்த உண்மையை சொன்னால் முல்லை தாங்கிக் கொள்ள மாட்டார் என்பதால் தான் கதிர் இதை மறைத்திருப்பார். ஆனால் இப்போது தெரிந்த பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் அதை ஒத்துக் கொள்வார். இதனால் இனி குழந்தை பிறக்க சிகிச்சை எடுக்கலாம் என்று குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் சேர்ந்து முடிவெடுப்பார்கள் என்று தெரிகிறது. இனி முல்லை வரும் வாரங்களில் இதை பற்றிய காட்சிகள் தான் வர இருக்கிறது என்பது உறுதியாகிறது.