தமிழகத்தில் மார்ச் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தின் காண்பியகுமாரி மாவட்டத்தில் வரும் மார்ச் 1ம் தேதி அன்று மகா சிவராத்திரியையொட்டி சிவாலய ஓட்டம் நடக்க உள்ளதால், அன்றைய தினம் கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் பண்டிகைகளுக்கு தமிழக அரசு மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவிப்பை வெளியிட்டு விடும். மாநிலம் முழுவதுமாக அல்லாமல் குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் கொண்டாடப்படும் பண்டிகைகள், சிறப்பு நாட்கள் மற்றும் திருவிழாக்கள் போன்ற நாட்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் மட்டும் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறையாக மாவட்ட நிர்வாகம் உத்தரவு வெளியிடும்.
நாட்டின் தலைநகரில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – உக்ரைன், ரஷ்யா போர் எதிரொலி!
குறிப்பிட்ட நாளிற்கு பதிலாக மற்றொரு நாள் வேலை நாளாக அறிவிக்கப்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் மகா சிவராத்திரி அன்று சிவாலய ஓட்டம் நடைபெறும். கன்னியாகுமரி மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் சிவாலய ஓட்டம் சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது. இதனால் அன்று மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்க முன்னதாக கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
ஏப்ரல் 1 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – இரவு நேர ஊரடங்கு நீக்கம்! அரசு அனுமதி!
இதனால் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மார்ச் 1ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், குமரி மாவட்டத்திற்கு வருகிற 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது. அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களை கொண்டு செயல்படும். இதற்கு பதிலாக மார்ச் 12ம் தேதியான சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.