6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பள்ளிகள் திறக்கும் தேதி வெளியீடு!
லடாக் பகுதியில் குளிர் கால விடுமுறைக்கு பிறகு மார்ச் 1ம் தேதி 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளிகளும் மீண்டும் திறக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
பள்ளிகள் மீண்டும் திறப்பு:
லடாக் யூனியன் பிரதேசத்தில் சனிக்கிழமை நிலவரப்படி 24 பி இருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த தொற்று எண்ணிக்கை 27,971 ஆக பதிவாகியுள்ளது. அது நேரத்தில் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் சீராக்கி வருகிறது. கொரோனா தொடர்பான அனைத்து நிலையான பாதுகாப்பு செயல்முறைகளையும் மாணவர்கள் தங்கள் வீட்டிலும் பள்ளிகளிலும் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. COVID-19 அறிகுறி உள்ள மாணவர்கள் பள்ளியில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லடாக்கின் கார்கில் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் குளிர்கால விடுமுறை விடப்பட்டிருந்தது. விடுமுறைக்கு பிறகு அடுத்த மாதம் முதல் நேரடி வகுப்புகளைத் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வ உத்தரவு சனிக்கிழமையன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள கோவிட்-19 நிலைமையின் புதிய ஆய்விற்கு பிறகு அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும் மீண்டும் திறக்க முடிவு எடுக்கப்பட்டது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக, துணை ஆணையர் கார்கில் சந்தோஷ் சுகதேவ் உத்தரவை வெளியிட்டுள்ளார்.
தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும் அரசு வேலை ரெடி – விண்ணப்பிக்கலாம் வாங்க !
அதில், மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நிலைமை சீரானதை தொடர்ந்து அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் குளிர்கால விடுமுறைக்குப் பிறகு மார்ச் 1 முதல் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மீண்டும் திறக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 5ஆம் வகுப்பு வரையிலான மார்ச் 11ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கார்கில் மற்றும் லே மாவட்டங்களில் உள்ள பள்ளிகள்,கார்கில் மற்றும் லே மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், நவம்பர் மாதம் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்த காரணத்தால் குளிர்கால விடுமுறைக்காக மூடப்பட்டன.