தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும் அரசு வேலை ரெடி – விண்ணப்பிக்கலாம் வாங்க !
மதுரை அரசு இராசாசி மருத்துவமனை ஆனது கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Security, Scavenger பணிக்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, ஊதியம் போன்ற தகவல்களை இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Madurai GH வேலைவாய்ப்பு விவரங்கள்:
- கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Security, Scavenger பணிகளுக்கு தலா ஒரு பணியிடம் வீதம் மொத்தம் இரண்டு காலிப்பணியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
- துப்புரவு பணியாளர் (Scavenger) பணிக்கு விண்ணப்பதாரர்கள் தமிழில் நன்கு எழுத படிக்க தெரிந்திருப்பது அவசியமாகும்.
TNPSC Coaching Center Join Now
- காவலர் (Security) பணிக்கு விண்ணப்பதாரர்கள் தமிழில் நன்கு எழுத படிக்க தெரிந்திருப்பது அவசியமாகும். மேலும் முன்னாள் ராணுவத்தினருக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
- மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாத ஊதிய தொகையாக ரூ.8,500/- அளிக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு நேரடியாக நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்வையிடவும்.
Madurai GH விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு தகுதியானவர்கள் மற்றும் விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 28.02.2022 ம் தேதியின் அன்று மாலை 5.45 மணிக்குள் தங்களின் விண்ணப்பங்கள் மற்றும் தேவையான சான்றிதழுடன் நேரில் சென்று விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டார்கள். எனவே தகுதியானவர்கள் நாளை தவறாமல் நேரில் சென்று விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.