500 ராக்கெட் லான்சர்ஸ், 1000 டாங்கி எதிர்ப்பு கருவிகள் – உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் உலக நாடுகள்!
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையில் தொடர்ந்து 3 வது நாளாக நடந்து வரும் போரில் உக்ரைனிற்கு பல்வேறு உலக நாடுகளும் ஆயுத உதவிகளை செய்து வருகிறது. இதனை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆயுத உதவிகள்:
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து 3 வது நாளாக நடந்து வருகின்றது. 2 உலக போர்களை சந்தித்த ரஷ்யா,மிகவும் சிறிய நாடான உக்ரைனை ஒரே நாளில் வீழ்த்தும் என்று தான் பல உலக நாடுகளும் நினைத்து வந்தது. உக்ரைனின் பல்வேறு பகுதிகளையும் கைப்பற்றிய ரஷ்யா, அதன் தலைநகரான கிய்வ் நகரை கைப்பற்ற மிகுந்த தீவிரத்தை காட்டி வருகின்றது. அங்கு தாக்குதல் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. ஆனால் உக்ரைன் தலைநகரத்தை காப்பாற்ற மிகவும் போராடி வருகிறது. போர் நீண்டு கொண்டு செல்வதால் உலக நாடுகள் யாருக்கு ஆதரவு என்பதில் பெரும் சர்ச்சை நீடித்து வருகின்றது.
தமிழகத்தில் மார்ச் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
இதனால் உக்ரைன் அதிபர், நீங்கள் போருக்கு வர விலை என்றாலும், அதற்கான ஆயுதங்களை தந்து உதவுமாறு உலக நாடுகளுக்கு கோரிக்கை வைத்து வந்தார். இது வரை ரஷ்யாவை எதிர்க்கும் வகையிலான ஆயுதங்களை வழங்காத பல நாடுகளும், தற்போது மிகவும் தீவிரமடைந்திருக்கும் போர் நிலையை கருத்தில் கொண்டு, உக்ரைனிற்கு உதவ முன்வந்துள்ளது. இதனால் ஆயிரம் டாங்கி எதிர்ப்பு கருவிகளையும், 500 ஏவுகணைகளையும் வழங்கப்படும் என ஜெர்மனி சான்சிலர் ஒலாப் ஷோல்ஸ் கூறியுள்ளார்.
நெதர்லாந்தும் 50 டாங்கி எதிர்ப்பு கருவிகளை வழங்க இருக்கிறது. உக்ரைனுக்கு 400 ஏவுகணைகளையும் வழங்கப்படும் நெதர்லாந்து ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 350 மில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ தளவாடங்களை உக்ரைனைக்கு வழங்க முடிவு செய்துள்ளார். தாக்குதலை எதிர்கொள்வதற்கு தேவையான போர் கருவிகளை வழங்க அமெரிக்க முன்வந்துள்ளது.
நாட்டின் தலைநகரில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – உக்ரைன், ரஷ்யா போர் எதிரொலி!
செக் குடியரசும் 9.5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை கப்பல் மூலம் உக்ரைனுக்கு அனுப்ப உள்ளது. செக் பிரதமர் பெத்ரோ ஃபியாலா டிவிட்டரில் இயந்திர துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் அவைகளுக்கு தேவையான குண்டுகள் அனுப்பிவைக்கப்படும் என தெரிவித்துள்ளார். போர்ச்சுகல் சார்பில் 175 படைகள் உக்ரைனுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.