விஜே சித்ராவை தொடர்ந்து மர்மமான முறையில் இறந்த சீரியல் நடிகை – போலீஸ் தீவிர விசாரணை!
சினிமாவில் முன்னணி நடிகர், நடிகைகளாக இருந்த பலர் சிறு வயதிலேயே தற்கொலை செய்து கொள்ளும் செய்தி அதிகம் கேள்விப்படுகிறோம். இந்நிலையில் தற்போது பிரபலமான பெங்காலி நடிகை ஒருவர் தற்கொலை செய்து கொண்ட தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
பெங்காலி நடிகை தற்கொலை:
நடிப்புத்துறையில் முன்னேறி ஏகப்பட்ட புகழ், பெருமை கிடைத்தாலும் அதில் சில நெகட்டிவ் பகுதி மற்றும் பல நடிகை, நடிகர்களின் தற்கொலை இப்போது வரை மர்மமாக இருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் பல நடிகைகள் இது போல தற்கொலை செய்திருக்கிறார்கள். ஆனால் ஒரு ஆண்டுக்கு முன்னதாக நடந்த விஜே சித்ராவின் தற்கொலை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்கொலை செய்வதற்கு 5 மணி நேரத்திற்கு முன்னதாக கூட சிரித்து பேசிய சித்ராவிற்கு என்ன ஆனது என்பது தமிழக மக்களின் ஒரே கேள்வியாக இருக்கிறது.
ஆனால் இப்போது வரை அதற்கான சரியான பதில் கிடைக்கவில்லை. தினமும் ஒருவர் சித்ராவை பற்றி புதுப்புது தகவல்களை சொல்வது ரசிகர்களை குழப்பத்தில் வைத்துள்ளது. சித்ராவே வந்து சொல்லாத வரை எந்த உண்மையும் வெளியாகாது என்பது உறுதியாகி இருக்கிறது. சித்ராவை தொடர்ந்து தற்போது பல்லாபி தே எனும் பிரபலமான பெங்காலி நடிகை இன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ‘அமிர் சிராஜேர் பேகம்’ மற்றும் ‘மன் மனே நா’ உள்ளிட்ட பெங்காலி டிவி சீரியல்களில் நடித்து அவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.
Exams Daily Mobile App Download
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் தனது வீட்டை விட்டு வெளியேறி அவருடைய நண்பர் ஷாக்னிக் சக்கரவர்த்தி உடன் ஒரு வாடகை வீட்டை பிடித்து வசித்து வந்தார். இந்நிலையில் அவர் நேற்று (மே 15) தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசிடம் அவருடைய நண்பர் ஷாக்னிக் சக்கரவர்த்தி தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நடிகையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தற்கொலை குறித்து நடிகையின் நண்பரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.