பிறந்தநாள் விழாவை தடுக்க கோபி போட்ட திட்டம், உண்மையை கண்டுபிடித்த கதிர் மூர்த்தி – இன்றைய “மகா சங்கமம்” எபிசோட்!

0
பிறந்தநாள் விழாவை தடுக்க கோபி போட்ட திட்டம், உண்மையை கண்டுபிடித்த கதிர் மூர்த்தி - இன்றைய
பிறந்தநாள் விழாவை தடுக்க கோபி போட்ட திட்டம், உண்மையை கண்டுபிடித்த கதிர் மூர்த்தி - இன்றைய "மகா சங்கமம்" எபிசோட்!
பிறந்தநாள் விழாவை தடுக்க கோபி போட்ட திட்டம், உண்மையை கண்டுபிடித்த கதிர் மூர்த்தி – இன்றைய “மகா சங்கமம்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மற்றும் “பாக்கியலட்சுமி” சீரியல் மகா சங்கமம் சீரியலில், கோபி எழில் இடையே எதோ பிரச்சனை இருப்பதாக மூர்த்தி தனம் பேசுகின்றனர். பின் கோபியிடம் ராதிகா கண்டிப்பாக வர வேண்டும் என சொல்கிறார். அதனால் பிறந்தநாள் விழாவை நிறுத்த கோபி முயற்சிகளை செய்கிறார்.

மகா சங்கமம்:

இன்று மகா சங்கமம் சீரியலில், தனம் மற்றும் மூர்த்தி புது வீடு கட்ட வேண்டும் என பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கதிர் வந்து கோபிக்கும் எழிலிற்கும் இடையே எதோ பிரச்சனை இருப்பதாக சொல்கிறார். பின் தனம் செல்வி சொல்வதை பற்றி சொல்கிறார். அப்போது பாக்கியாவை நினைத்து அனைவரும் கவலைப்படுகின்றனர். பின் மூர்த்தி எல்லாத்தையும் சரி செய்ய வேண்டும் என நினைக்கிறார். பின் செழியன் வேலை பார்த்து கொண்டிருக்க எழில், ஜீவா, கதிர் வந்து செழியனை விளையாட கூப்பிடுகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

அப்போது நான்கு பேரும் விளையாடி கொண்டிருக்க அப்போது கோபி வந்து அலங்காரம் செய்ததை பார்த்து கடுப்பாகிறார். பின் ராதிகா கோபிக்கு போன் செய்கிறார். கோபி ராதிகாவிடம் சந்தோசமாக பேச ஆனால் ராதிகா பாக்கியாவின் நிகழ்ச்சிக்கு கண்டிப்பாக வர வேண்டும் என சொல்கிறார். பின் கோபி முடியாது என சொல்ல அப்பறம் உங்களிடம் பேசவே மாட்டேன் என சொல்கிறார். கோபி என்ன செய்வது என தெரியாமல் தனது நண்பருக்கு போன் செய்கிறார். ராதிகாவை பாக்கியா அழைத்து இருப்பதாக சொல்கிறார். அப்போ நீ மாட்டிக் கொள்ள போகிறாயா என கோபியின் நண்பர் கேட்கிறார்.

அதெல்லாம் முடியாது இந்த பிறந்தநாள் விழாவை நான் நடத்த விடமாட்டேன் என சொல்கிறார். அதை கதிர் பின்னால் நின்று கேட்டு விடுகிறார். கோபி கதிர் நிற்பதை பார்த்துவிட்டு தனது நண்பர் வீட்டில் பிறந்தநாள் விழாவை நிறுத்த இருப்பதாக சொல்கிறார். அதனால் கதிருக்கு கோபி மீது சந்தேகம் இருக்கிறது. இது பற்றி மூர்த்தியிடம் சொல்கிறார். அப்போது எல்லாரும் பேசிக் கொண்டிருக்க கோபி நெஞ்சு வலிப்பது போல நடிக்கிறார். பின் அனைவரும் பதட்டமடைய, கதிர் இது நடிப்பு என மூர்த்தியிடம் சொல்கிறார். பின் மூர்த்தி முதலுதவி செய்வது போல நடிக்கிறார். அதை பார்த்து கோபி தனக்கு சரியாகிவிட்டது என சொல்கிறார்.

இதயத்தை கொண்டு வர பாரதிக்கு வந்த சிக்கல், கண்ணம்மா செய்த காரியம் – இன்றைய எபிசோட்!

பின் எழில் ஆம்புலன்ஸை அழைக்க மூர்த்தி சரியாகிவிட்டது வேண்டாம் என சொல்கிறார். பிறந்தநாள் விழாவை நிறுத்த ஏன் இப்படி செய்கிறார் என தெரியாமல் இருப்பதாக மூர்த்தி கதிரிடம் சொல்கிறார். இது பற்றி மூர்த்தி பேச வேண்டும் என சொல்கிறார். அனைவரும் பதட்டமாக இருக்க கோபி ஒன்னும் பிரச்சனை இல்லை என சொல்கிறார். பின் மறுநாள் தாத்தாவின் பிறந்தநாள் அன்று தனம் பாக்கியா ஆசிர்வாதம் வாங்குகிறார். பின் தாத்தா வெளியே வர அவருக்கு வாய் சரியாகி விடுகிறது, அதை பார்த்து அனைவரும் சந்தோசப்படுகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!