இதயத்தை கொண்டு வர பாரதிக்கு வந்த சிக்கல், கண்ணம்மா செய்த காரியம் – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் பாரதி இதயத்தை எடுத்துக் கொண்டு வேகமாக சென்னைக்கு வருகின்றனர். அப்போது பயங்கரமாக மழை பெய்ய மரம் கீழே விழுந்து அம்புலன்ஸ் செல்ல முடியாமல் இருக்கிறது. சரியான நேரத்தில் அங்கே கண்ணம்மா வர பாரதி கண்ணம்மா இதயத்தை கொண்டு வருகின்றனர்.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியலில், பயங்கரமாக மழை பெய்ய பாரதி கண்ணம்மாவின் புத்திசாலித்தனத்தால் நல்லபடியா இதயத்தை கொண்டு வருகிறார். அப்போது கணேஷ் காலை வரை மழை இல்லாமல் தான் இருந்தது. அந்த கண்ணம்மா தான் சொல்லிக் கொண்டே இருந்து மழை வந்துவிட்டது. கண்ணம்மா தான் திட்டம் எல்லாம் சொதப்பியதற்கு காரணம் என சொல்ல , உடனே பாரதி கண்ணம்மா தான் தொடக்கத்தில் இருந்து நாளை வானிலை ஆய்வு மையத்தில் இருந்து மழை பெய்ய இருப்பதாக சொன்னதாக சொன்னாரே அதற்கு தகுந்த ஏற்பாடு செய்யாமல் விட்டது நீங்க தான் என பாரதி சொல்கிறார்
TN Job “FB Group” Join Now
அவர் பேசியதை கேட்டு கணேஷ் எதுவும் பேசாமல் இருக்கிறார். பின் வண்டி வேகமாக சென்று கொண்டிருக்க சௌந்தர்யா குடும்பத்தினர், வெண்பா, ஷர்மிளா, பொதுமக்கள் என அனைவரும் ஆவலுடன் என்ன நடக்க இருக்கிறது என காத்துக் கொண்டிருக்கின்றனர். பயங்கரமாக மழை பெய்ததால் பாரதி வந்த அம்புலன்ஸ் முன்னாள் பெரிய மரம் ஒன்று விழுகிறது. அதனால் போலீஸ் வண்டி அம்புலன்ஸ் எல்லாம் விபத்தில் மாட்டிக் கொள்கிறது. பாரதி கீழே இறங்கி பார்க்க அவரால் எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறது
பாரதி எல்லாரிடமும் சென்று உதவி கேட்கிறார் ஆனால் யாரும் செய்யவில்லை, மனம் வெறுத்து போன பாரதி அழ தொடங்குகிறார். அப்போது சௌந்தர்யா பாரதி நிலைமையை நினைத்து அழுகிறார். பின் ஹேமா தன்னுடைய அப்பாவிற்கு இப்படி ஆகிவிட்டதே என நினைத்து அழுகிறார், விக்ரம் என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார். வெண்பா மற்றும் பொதுமக்கள் என்ன செய்ய போகிறார்கள் என தெரியாமல் ஆவலுடன் இருக்கிறார். அப்போது வேகமாக அம்புலன்ஸ் ஒன்று வருகிறது. அதில் கண்ணம்மா வந்து இறங்குகிறார்.
விஜய் டிவி சீரியல் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் – இந்த வார டி.ஆர்.பி ரேட்டிங் வெளியீடு!
இதுவும் நம்ம ஆம்புலன்ஸ் தான் என கண்ணம்மா சொல்ல வேகமாக பாரதியை இதயத்துடன் வர சொல்கிறார். பின் பாரதி வர கணேஷ் ஆம்புலன்சில் எற பார்க்கிறார். ஆனால் பாரதி கண்ணம்மாவை எற சொல்லிவிட்டு கணேஷை இறங்க சொல்கிறார். பின் வேகமாக அம்புலன்ஸ் வர அனைவரும் சந்தோஷத்தில் இருக்கின்றனர். சரியாக 1 மணி நேரம் 27 நிமிடங்களில் அம்புலன்ஸ் வருகிறது. அதை நினைத்து மக்கள் சந்தோசமாக இருக்க இதயத்தை கொடுத்துவிட்டு பாரதி பதட்டமாக இருக்கிறார். உன்னால் ஆப்ரேசன் செய்ய முடியும் என விக்ரம் சொல்ல ஆனால் பாரதியால் முடியவில்லை. அப்போது கண்ணம்மா உங்களால் முடியும் என சொல்ல பின் ஆப்ரேசன் செய்ய பாரதி தயாராகுகிறார். சக்தியின் அம்மா அப்பா வாசலில் காத்துக் கொண்டிருக்க ஆப்ரேசன் நடக்கிறது.