PM kisan விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 பென்சன் – சூப்பர் அறிவிப்பு! முழு விவரம் இதோ!

0
PM kisan விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 பென்சன் - சூப்பர் அறிவிப்பு! முழு விவரம் இதோ!
PM kisan விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 பென்சன் - சூப்பர் அறிவிப்பு! முழு விவரம் இதோ!
PM kisan விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 பென்சன் – சூப்பர் அறிவிப்பு! முழு விவரம் இதோ!

மத்திய அரசின் பிஎம் கிசான் மந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பென்சன் வழங்கப்படுகிறது. அதாவது 60 வயதைக் கடந்த விவசாயிகளுக்கு ஒவ்வொரு மாதமும் பென்ஷன் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட முதலீட்டுத் திட்டமாக இவை செயல்பட்டு வருகிறது. இது குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

விவசாயிகளுக்கு பென்சன்:

மத்திய அரசு விவசாயிகள் நலனுக்காகப் பல திட்டங்களை அறிவித்துள்ளது. அந்த வகையில் மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இது மூன்று தவணைகளாக தலா ரூ.2000 என பிரித்து வழங்கப்படுகிறது. இதுவரை 11 தவணைகள் வழங்கப்பட்டு விட்ட நிலையில், 12வது தவணைப் பணம் இன்னும் சில நாட்களில் வரவிருக்கிறது. இந்தத் தொகையை எதிர்பார்த்து சுமார் 12 கோடி விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இதுமட்டுமல்லாமல், பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளின் தற்போதைய பொருளாதார பிரச்சனைகளைக் கணிசமாகக் குறைக்க முடியும் என நம்பப்படும் நிலையில், ஓய்வு காலத்தில் விவசாயிகளைக் காப்பாற்றும் விதமாக ஒவ்வொரு மாதமும் பென்சன் பெறும் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

அதாவது PM Kisan Man Dhan Yojana திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 60 வயதுக்குப் பிறகு, விவசாயிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 3000 ரூபாய் ஓய்வூதியம், அதாவது ஆண்டுக்கு 36,000 ரூபாய் வழங்கப்படுகிறது. உண்மையில், மோடி அரசு இந்த தொகையை விவசாயிகளுக்கு நிதி உதவிக்காக வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பம் – 2 நாள் அவகாசம்!

தேவையான ஆவணங்கள்:

மத்திய அரசால் நடத்தப்படும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்த, உங்களுக்கு சில ஆவணங்கள் தேவைப்படும். ஆதார் அட்டை, வங்கி கணக்கு விவரங்கள் போன்றவை. ஆனால் நீங்கள் PM கிசானைப் பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்றால், இதற்காக நீங்கள் எந்தக் கூடுதல் ஆவணத்தையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை.

Exams Daily Mobile App Download
இந்த திட்டத்தின் பலன் யாருக்கு கிடைக்கும்?
  • 18 முதல் 40 வயது வரை உள்ள எந்தவொரு விவசாயியும் இந்தத் திட்டத்தின் பலனைப் பெறலாம்.
  • இதற்கு, சாகுபடி நிலம் அதிகபட்சம் 2 ஹெக்டேர் வரை இருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 40 ஆண்டுகள் விவசாயிகளின் வயதைப் பொறுத்து ரூ 55 முதல் ரூ 200 வரை மாதாந்திர பங்களிப்பைச் செலுத்த வேண்டும்.
  • 18 வயதில் சேரும் விவசாயிகளுக்கு மாதாந்திர பங்களிப்பு ரூ.55 வழங்கப்படும்.
  • நீங்கள் 30 வயதில் இந்தத் திட்டத்தில் சேர்ந்தால், நீங்கள் ரூ.110 டெபாசிட் செய்ய வேண்டும்.
  • நீங்கள் 40 வயதில் சேர்ந்தால், ஒவ்வொரு மாதமும் 200 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!