வீட்டிலிருந்தே வேலை செய்பவரா நீங்கள்? அப்போ தவறாமல் படிங்க!
தற்போது தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பலர் வீட்டிலிருதே பணிபுரிந்து வருகின்றனர். அவ்வாறு வீட்டில் இருந்தே வேலை செய்வோருக்கான முக்கிய அறிவுறுத்தல்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
தண்ணீர் அவசியம்:
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு சார்பில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து வேறு எதற்கும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 2 மாதங்களுக்கு மின்கட்டணம் ரத்து – சீமான் முதல்வரிடம் கோரிக்கை!!
இதனால் பெரும்பான்மையான மக்கள் வீட்டிலிருந்தே அலுவலக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்கி விட்டது. அதனால் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. வீடுகளில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஏசி வசதி பொருத்தப்பட்டுள்ளது. நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், சருமத்தை மிருதுவாக வைத்து கொள்ளவும் அதிகப்படியான தண்ணீர் பருகுவது அவசியமாகும்.
TN Job “FB Group” Join Now
நமது உடலில் 20% வரை நீர் உள்ளது. நீர் நாம் உண்ணும் உணவை திறம்பட செரிமானப்படுத்துவதற்கும், வியர்வையின் மூலம் நமது உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்துவதற்கும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. ரத்த அழுத்தம் செயல்பாடுகளில் நீர் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே குறிப்பிட்ட இடைவெளியில் நாம் கட்டாயமாக நீர் அருந்த வேண்டும். நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகள், பழங்கள், புதிய பழச்சாறுகள், காய்கறி சாறுகள் போன்றவற்றை அருந்தலாம்.
ஏசி அறைகளில் நாம் இருந்தாலும் நீர் அருந்துவது கட்டாயம். வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் தங்களது மேஜையில் கட்டாயம் தண்ணீர் வைத்துக்கொள்ள வேண்டும். ஒருவர் ஒரு நாள் முழுவதும் தண்ணீர் குடிக்க வேண்டும். அதற்கு பதிலாக கடைகளில் விற்கும் சர்க்கரை பானங்கள், காபி, டீ போன்றவற்றை அருந்துவதை குறைத்துக்கொள்ள வேண்டும்.