பெற்றோர்களின் கவனத்திற்கு – செல்வ மகள் சேமிப்பு திட்டம் குறித்த முழு விவரங்களுடன்!
குழந்தைகளுக்கு பயன்படும் வகையில் சிறப்பு சேமிப்பு திட்டங்கள் பல அமலில் உள்ளது. இதில் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் முக்கியமான ஒன்றாகும். சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் (SSY) என்பது பெண் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட அரசாங்க சேமிப்பு திட்டமாகும். இத்திட்டம் திறக்கப்பட்ட நாளிலிருந்து 21 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படுகிறது.சுகன்யா சம்ரிதி திட்டத்தின் கீழ் ஒரு பெற்றோர் அதிகபட்சமாக இரண்டு கணக்குகளைத் திறக்கலாம். ஒவ்வொரு மகளுக்கும் ஒன்று (இரண்டு மகள்கள் இருந்தால்).
ATM கார்டு மூலம் ஆயுள் காப்பீடு பெறலாம் என்று தெரியுமா..? பெறும் வழியை தெரிந்து கொள்ள இதை படிங்க..
முதல் அல்லது இரண்டாவது பிரசவத்தில் இருந்து இரட்டைப் பெண் குழந்தைகள் இருந்தால், பெற்றோர் மூன்றாவது கணக்கைத் திறக்க இந்தத் திட்டம் அனுமதிக்கிறது. கணக்கு தொடங்கும் போது, பெண் குழந்தை 10 வயதுக்கு குறைவாக இருப்பது கட்டாயமானதாகும். இது தற்போது ஆண்டுக்கு 8.2% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒரு முறை மாறுபடும். ஒரு ஆண்டுக்கு 10,000 ரூபாயை முதலீடு செய்தால் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் 1.58 லட்சம் கார்பஸ் கிடைக்கும். 18 வயது ஆன பிறகு கூடுதல் பங்களிப்புகள் இல்லாமல் ஆறு வருட கூடுதல் வட்டியை வழங்குகிறது.


























