தமிழக சிறுபான்மையினருக்கு 2 லட்ச வரை மானியம் – அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் சிறுபான்மையின மக்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து இவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை அரசு சார்பில் மானியம் வழங்கப்பட்டு, பல்வேறு நலத்திட்டங்கள் செய்யப்படுத்த இருப்பதாக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மையினர் மானியம்
தமிழகத்தில் இன்று அனைத்து பகுதிகளிலும் பக்ரீத் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சிக் கோட்டையில் உள்ள சாதுல்லா கான் மசூதியில் முஸ்லீம்கள் அனைவரும் இன்று காலையில் சிறப்பு தொழுகை செய்தனர். இந்த சிறப்பு தொழுகையில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு அனைவருக்கும் பக்ரீத் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார். மேலும் இவர் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதம் உயர்வு? சூப்பரான செய்தி இதோ!
இவர் கூறியதாவது, தமிழக அரசு சார்பாக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து அனைத்து பள்ளி வாசல்களை புனரமைத்து புதுப்பிக்க இந்த ஆண்டு 7 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலான நிதி வழங்குவது தொடர்பாக தமிழக முதல்வரிடம் கேட்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் முஸ்லிம் உதவும் சங்கம், மற்றும் மகளிர் கிருத்துவ உதவி சங்கம் என இரண்டு சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து நடப்பு ஆண்டில் கூடுதலான சங்கங்கள் அமைக்க முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் இவர் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் விதவைகளுடைய குழந்தைகளின் கல்வி செலவினம், இலவசமாக தையல் எந்திரம் வழங்குதல், சிறு தொழில் செய்தல் உள்ளிட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. அத்துடன் இதற்கு மாவட்டதோறும் அமைக்கப்பட்ட சங்கத்தின் மூலமாக ஒரு லட்சம் பங்களிப்பு வழங்கினால் அரசு சார்பாக 2 லட்சம் வரை மானியம் பெறப்பட்டு இத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதன்படி விரைவில் இத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.