தமிழக அரசு பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் நியமனம் – அமைச்சர் தகவல்!
தமிழக அரசுப் பள்ளிகளில் 2022 – 2023 ம் கல்வியாண்டில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. அதனால் ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனை சரி செய்ய கூடுதல் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் நியமனம்:
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு நடப்பு கல்வியாண்டில் தான் பள்ளிகள் சரியான நேரத்தில் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் வழக்கம் போல நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டுகளை விட நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. தற்போது மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லை. இந்த ஆசிரியர்கள் பற்றாக்குறையால் பள்ளிகளில் கற்றல் கற்பித்தலில் தொய்வு ஏற்படுதாக கூறுகின்றனர். அதனால் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தகுதித் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதனை தற்போது முதல் கட்டமாக ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக சிறுபான்மையினருக்கு 2 லட்ச வரை மானியம் – அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!
தற்போது அரசு மற்றும் அரசு பள்ளிகளில் உள்ள 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. தற்காலிக பணியிடங்களில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சுமார் 1.5 லட்சம் பேர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதில் 28, 984 பேர் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிகல்வி துறை தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் இந்த பணி நியமனத்திற்கு பல்வேறு எதிர்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கும்பகோணம் அருகே திப்புராஜபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகமாக உள்ளதால் அதற்கு தகுந்தாற் போல் கூடுதல் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும் என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.