செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதம் உயர்வு? சூப்பரான செய்தி இதோ!
அரசு சேமிப்பு திட்டமான செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்கி சேமிப்பவர்கள் விருப்பப்படி இந்த திட்டத்தின் வட்டி விகிதம் உயர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
செல்வமகள் சேமிப்பு திட்டம்:
இந்தியாவில் பலதரப்பட்ட சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு மற்றும் பாதுகாப்பான சேமிப்பு திட்டம் என்றால் அது செல்வமகள் சேமிப்பு திட்டம் தான் முன்னிலையில் உள்ளது. மேலும், அதிக வட்டி தரும் திட்டமாகவும் இது இருப்பதால் பலரும் இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் மட்டுமே கிட்டத்தட்ட செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் வாயிலாக 26.03 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே அதிகரிக்கும் இடைநிற்றல் – மாநில அரசு அதிரடி நடவடிக்கை!
இத்திட்டத்தில் இணைவோர் கணக்கை முடிக்கும் போது மூன்று மடங்கு தொகை கிடைக்கும் என்பதால் பெண் குழந்தைகளுக்கு ஏற்ற ஒரு திட்டமாக இருந்து வருகிறது. இதில் குறைந்தபட்சமாக ரூ.250 லிருந்து ஒன்றரை லட்சம் வரையிலும் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடங்கியபோது 9.1 சதவீத வட்டி வீதம் வழங்கப்பட்டது. பின்னர் அவ்வப்போது இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்து தற்போது 7.6 சதவீத வட்டி தான் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் ரிசர்வ் வங்க ரெப்போ விகிதத்தை மீண்டும் 0.50 சதவீதம் உயர்த்திய பிறகு, இந்த சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஜூன் இறுதிக்குள் உயரும் என தெரிவித்திருந்தனர்.
Exams Daily Mobile App Download
அதன்படி ரெப்போ விகிதத்தை ஒரு மாதத்தில் 90 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதனால் அரசின் சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் 0.50 முதல் 0.75 சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஜூலை மாதம் முதல் செல்வமகள் சேமிப்பு, ppf,nsc, ssy ஆகிய இந்த திட்டத்தின் வட்டி விகிதங்கள் உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றன. எனவே மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பை வெளியிடும் வரை வாடிக்கையாளர்கள் காத்திருப்பது அவசியம்.